பிரிஞ்சி சோறு / சாதம்
தேவையான பொருட்கள்: 2 கப் பாஸ்மதி அரிசி 1 வெங்காயம் 2 தக்காளி 5 கிராம்பு 1 துண்டு கறுவா பட்டை 5 ஏலக்காய் 1 கறுப்பு ஏலக்காய் 1 அன்னாசிப்பூ 5 பிரியாணி இலை ½ மே.க பெருஞ்சிரகம் 1 மே.க மிளகாய்த்தூள் ½ மே.க இறைச்சிச்சரக்குத்தூள் ½ தே.க மஞ்சள் தூள் 1 பெரிய கரட் 25 போஞ்சி 1 பெரிய உருளைக்கிழங்கு ½ கப் பட்டாணி 2 கப் தண்ணீர் 2 கப் தேங்காய்ப்பால் உப்பு 2 மே.க இஞ்சி விழுது 2 மே.க உள்ளி விழுது 3 பச்சைமிளகாய் ½ கப் மல்லிஇலை ½ கப் புதினா எண்ணை நெய் பாண் செய்முறை: முதலில் அரிசியைக் களைந்து, தண்ணீர் ஊற்றி, ஊற விடவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டிக் கொள்ளவும். காய்கறிகளை விரும்பிய வடிவில் வெட்டி வைக்கவும். பாணை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும். அதில் பாண் துண்டுகளை பொரித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதன்பின்பு எண்ணை / நெய் விட்டு, சூடானதும், பெருஞ்சீரகம், கிராம்பு, கறுவா பட்டை, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு ...