சால்மன் மீன் தீயல்!
தேவையான பொருட்கள்:
- 500 கிராம் சால்மன் மீன்
- 250 கிராம் வெங்காயம்
- 200 கிராம் கத்தரிக்காய்
- 150 கிராம் தக்காளிக்காய்
- 9 பச்சை மிளகாய்
- 5 மே.க தேங்காய்ப்பால்
- 3 மே.க கறித்தூள்
- உப்பு
- புளி
- மஞ்சள்
- கறிவேப்பிலை
- எண்ணை
- தண்ணீர்
செய்முறை:
- சால்மன் மீனை சத்தம் செய்து, மஞ்சள் மற்றும் உப்புச் சேர்த்துப் பிரட்டி, ஊற வைக்கவும்.
- புளியுடன் தண்ணீர் சேர்த்து ஊற வைத்து, கரைத்து வைக்கவும்.
- வெங்காயம், கத்தரிக்காய், தக்காளிக்காய் மற்றும் மிளகாயை நீளத் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை விட்டு, வெட்டி வைத்த வெங்காயம், தக்காளிக்காய், கத்தரிக்காய், மிளகாய், கறித்தூள், மற்றும் உப்பை ஆகியவற்றைச் சேர்த்து, அவியத் தேவையான அளவு தண்ணீர், புளி மற்றும் தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து, கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும், உப்பு மற்றும் புளி சுவை பார்க்கவும்.
- சால்மன் மீனை சேர்த்து, மூடி அவிய விடவும், சால்மன் மீன் அவிந்ததும், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வர அடுப்பை அணைத்து அடுப்பிலேயே சிறிது நேரம் விடவும். சுடச் சுட சோற்றுடன் அல்லது புட்டுடன் சேர்த்து பரிமாறவும்.
சால்மன் மீன் தீயல் தயார்!!!
குறிப்பு:
- உங்கள் ருசிக்கேற்ப்ப பொருட்களின் அளவை, கூட்டிக் குறைக்கவும்.
- விரும்பினால் மீன் தவிர்ந்த மற்றைய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, உப்பு மற்றும் புளி சுவை பார்த்து, அடுத்து மீனைச் சேர்த்து, மூடி அவியவிடவும். உங்களுக்கு விரும்பிய பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- மீன் சேர்த்த பின்பு கரண்டியால் அடிக்கடி கிண்டாமல், சட்டியை ஆட்டி கலக்கவும். கரண்டியால் அடிக்கடி கிண்டினால்மீன் உதிர்ந்த விடும்.
Comments
Post a Comment