தொதல்!

 

தொதல்!

தேவையான பொருட்கள்:

  • 1 சுண்டு வறுத்த சிவப்பு பச்சரிசி மா
  • 1 ¼ லீட்டர் தேங்காய்ப்பால்
  • 500 கிராம் சர்க்கரை
  • 250 கிராம் சீனி
  • 1 -2 கப் தண்ணீர்
  • 1 மே.க சவ்வரிசி
  • 1 மே.க வறுத்த பயறு 
  • ½ - 1 மே.க ஏலக்காய்த்தூள்
  • 25 கிராம் கயூ (முந்திரி)


செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் அதனை வடிகட்டி மாவுடன் சேர்க்க வேண்டும்.
  2. அடி கனமான பாத்திரத்தில் சிவப்புபச்சை அரிசிமா, சர்க்கரை, சீனி, மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்.
  3. மிதமான தீயில், அந்த கலவையை எடுத்து அடுப்பில் வைத்து, அகப்பையால் நன்றாக கிண்டிக் கொண்டே இருக்கவும்.
  4. தொதல் கலவை இறுகி வரத்தொடங்கும்,அதன் பின்பு எண்ணெயும் கசியத் தொடங்கும். அப்பொழுது வறுத்து வைத்துள்ள சவ்வரிசி, பயறு, கயூ மற்றும் ஏலக்காய் தூள்  சேர்த்து தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும்.
  5. நன்றாக எண்ணை வெளியேறி, தொதல் இறுகி வரத் தொடங்கும, அப்பொழுது தொதலை தட்டில் போட்டு, சமப்படுத்திவிடவும்.
  6. தொதல் ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


சுவையான தொதல் தயார்!

குறிப்பு:
  • இந்த தொதலை, வறுக்காத மாவில் செய்யும் தொதலின் கிண்டும் நேரத்தை விட, குறைவான நேரத்தில் கிண்டி விடலாம்.
  • உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
  • இந்த அளவில் செய்ய அண்ணளவாக 1 கிலோ 630 கிராம் தொதல் கிடைத்தது.











Comments