கடலைக்கறி!

 




தேவையான பொருட்கள்:
  • 2 கப் கொண்டைக்கடலை (அவித்தது)
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 மே.க இஞ்சி
  • 1 மே.க உள்ளி
  • 2 மே.க மல்லித்தூள் (+/-)
  • 1 மே.க மிளகாய்த்தூள் (+/-)
  • 1 மே.க பெருஞ்சீரகம் 
  • 1/2 மே.க கரம்மசாலா(+/-)
  • 1/4 தே.க மஞ்சள் 
  • 200 மி.லீ தேங்காய்ப்பால்(+/-)
  • தண்ணீர் 
  • உப்பு
  • எண்ணை
  • மல்லிஇலை(-)
 

தாளிக்க:
எண்ணை
1 பெரிய வெங்காயம்
1 தே.க கடுகு
1 தே.க சின்னச்சீரகம்
கறிவேப்பிலை
செத்தல் / காயந்த மிளகாய்
பச்சைமிளகாய்
 

செய்முறை:
  1. தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். பச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும். இஞ்சி மற்றும் உள்ளியை சீவியோ அல்லது இடித்தோ வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். அதில் வெங்காயம் போடவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதில் தக்காளி, இஞ்சி, உள்ளி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வதக்கவும்.
  3. தக்காளி வதங்கி பிரண்டு வரும் பொழுது, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தூள் மணம் போனதும் கடலை மற்றும் தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து, அவிய விடவும். இறக்கும் தருவாயில் பெருஞ்சீரகத்தை இடித்துப் போட்டு, ஒரு கொதி வர இறக்கவும்.


தாளிதம்:
  1. ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும், அதில் மீதிப் பொருட்களைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதை கறியில் போட்டு கலந்து பரிமாறவும்.


குறிப்பு:
  • மல்லித்தூள், மிளகாய்த்தூளுக்கு பதிலாக கறித்தூள் பாவிக்கலாம்.
  • சிறிது கடலையை மசித்து கறியுடன் கலந்தால் கறி தடித்து வரும்.




























Comments