தொதல்!
தேவையான பொருட்கள்:
- ½ கிலோ சிவப்புபச்சை அரிசி
- 2 லீட்டர் தேங்காய்ப்பால் (Aroy d பெட்டி தேங்காய்ப்பால்)
- ¾ லீட்டர் தண்ணீர்
- ¾ கிலோ சர்க்கரை
- ¾ கிலோ சீனி
- 3 மே.க சவ்வரிசி
- 3 மே.க வறுத்த பயறு
- 1 - 1 ½ மே.க ஏலக்காய்த்தூள்
- 50 கிராம் கயூ (முந்திரி)
செய்முறை:
- அரிசியை கழுவி, குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஊற விடவும். ஊறிய அரிசியை, வார விடவும். அடுத்ததாக அரிசியை உரலில் இடித்தோ அல்லது மிக்சியில் அடித்து, குறுனல் இல்லாமல் அரித்து எடுத்து வைக்கவும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிவப்புபச்சை அரிசிமா, சர்க்கரை, சீனி, தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- மிதமான தீயில், அந்த கலவையை எடுத்து அடுப்பில் வைத்து, அகப்பையால் நன்றாக கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- அண்ணளவாக 30 நிமிடங்களின் பின்பு தொதல் கலவை இறுகி வரத்தொடங்கும், மற்றும் 45 நிமிடங்களின் பின்பு எண்ணெயும் கசியத் தொடங்கும். அப்பொழுது வறுத்து வைத்துள்ள சவ்வரிசி, பயறு, கயூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- நன்றாக எண்ணை வெளியேறி, தொதல் இறுகி வரத் தொடங்கும, அப்பொழுது தொதலை தட்டில் போட்டு, சமப்படுத்தி வைத்து கொள்ளுங்கள்.
- தொதல் ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
சுவையான தொதல் தயார்!
குறிப்பு:
- Aroy d 1 லிட்டர் தேங்காய்ப்பால் பெட்டியில் 2 உபயோகித்தேன்.
- உங்கள் சுவைக்கேற்ப கயூ, சவ்வரிசி, பயறு மற்றும் ஏலக்காய்த்தூளின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
- தொதலின் அளவிற்கேற்ப, தொதல் கிண்டும் நேரம் மாறுபடும்.
- இந்த அளவில் செய்தால் அண்ணளவாக 3 ¼ கிலோ தொதல் கிடைக்கும்.
தொதல்:
https://www.facebook.com/241547176758624/posts/514846476095358/?d=n
தொதல் (தேங்காய்ப்பால் ரின்):
https://www.facebook.com/241547176758624/posts/597851394461532/
Comments
Post a Comment