நாண்!




தேவையான பொருட்கள்:

  • 4 கப் மா
  • 7 கிராம் ஈஸ்ட்
  • 3 மே.க எண்ணெய் 
  • ½ கப் தயிர்
  • 1 ¼ கப் தண்ணீர்
  • 1 மே.க சீனி
  • உப்பு 


செய்முறை:  

  1. முதலில் ஸ்ட் மற்றும் சீனியை  ஒரு பாத்திரத்திலிடவும். அதில் வெதுவெதுப்பாக தண்ணீர் விட்டு,  கலந்து 5- 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் மா, உப்பு, தயிர், 2 மே.க எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதில் ஊற வைத்த ஈஸ்ட் கலவையை ஊற்றி, நன்கு மென்மையாக  சப்பாத்தி மாவு போல் குழைத்து, அதன் மேல் மீதியுள்ள எண்ணெயை பூசி விடவும். அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  3. மா நன்கு ஊதி வரும். அதனை மீண்டும் ஒரு முறை பிசைந்து குழைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  4. மிதமான தீயில் தோசைக்கல்லை சூடாக்கவும். 
  5. உருண்டையாக உருட்டி வைத்த மாவை சப்பாத்தி போன்று உருட்டவும். அதனை சூடான தோசைக்கல்லில் போட்டு, வேக விடவும்.
  6. நாண் நன்கு ஊதி மேலே வரும் போது, மறுபக்கம் திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். அதன் மேல் பட்டர் பூசி விடவும்.
  7. நாணுடன் பட்டர் சிக்கன், ரிக்கா மசாலா, லம் கராகி , ஶ்ரீ லங்கன் இறைச்சி கறி வகைகள் அல்லது வட இந்திய கறி வகைகளுடன் சேர்த்து பரிமாற சுவையா இருக்கும்.
சுவையான பட்டர் நாண் தயார்!


குறிப்பு:

  • நாணில் பலவகை  உண்டு ( கீம நாண், பெஸ்வாரி நாண் , பட்டர் நாண், உள்ளி நாண்)

1 கப் = 250 மி.லீ
1 கப் மா = 150 கிராம் மா
7 கிராம் ஈஸ்ட் = 2 ½ தே.க ஈஸ்ட்
















Comments